Search This Blog

ஞாயிறு, 29 நவம்பர், 2009

மனத்திருப்தி


"நீ எதுவும் வேலைக்கெல்லாம் போக வேண்டாம்"என்று முதலிரவு அன்றே கணவன் சொல்வான் என்று சசிகலா கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

திருமணத்துக்கு முன்பே அவன் சசிகலாவிடம்,"ஓவியம்,படிப்பு அப்படின்னு உனக்கு இருக்கும் தனித்தன்மைகள் நம்ம வீட்டோடயே முடங்கிட நான் காரணமாக மாட்டேன்."என்று உறுதியளித்திருந்தான்.

இப்போது என்னவென்றால் முதலிரவு அறைக்குள் வந்ததும் வராததுமாக நீ எந்த வேலைக்கும் போக வேண்டாம் என்று சொல்கிறானே...கடைசியா இவனும் சராசரி மனிதன்தானா  என மனதுக்குள்ளேயே புழுங்கினாள்.

ஆனால் அவன் அடுத்து சொன்ன வார்த்தைகள் சசிகலாவுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தன.

"நீ ஒரு இடத்துக்கு வேலைக்குப் போனா சம்பளம் கிடைக்கும். ஆனா உன்னோட மற்ற திறமைகள் வெளிவராமலேயே போற அபாயம் இருக்கு. அதனால நீ நம்ம ஊர்ல இருக்குற ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு தினமும் குறிப்பிட்ட நேரம் போனா உன் திறமைகளை நாலு பேருக்கு கற்றுக் கொடுத்த மனத் திருப்தியும் இருக்கும். சந்தோஷமும் கிடைக்கும்."என்று அவன் சொன்னதும் சட்டென்று கணவனைக் கட்டிக் கொண்டாள் சசிகலா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக